Showing posts with label பிக்ஹு. Show all posts
Showing posts with label பிக்ஹு. Show all posts

Saturday, January 2, 2016

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா?

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா?

தொழுகையில் அல்லாகு அக்பர்என்று எப்படிக் கூறுவீர்கள்? அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா? 

காடுகள் காற்றில் இசைக்கின்றன. 
கடலின் அலைகள் இசைக்கின்றன 
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன. 
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது 
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள். 

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும். 

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும். 

இது ஹலால் இது ஹராம் 
நல்ல கவிதை ஹலால் தவறான கவிதை ஹராம் 
நல்ல இசை ஹலால் தவறான இசை ஹராம் 

Friday, October 17, 2014

அக்ல் நக்ல் பார்வையில் பிக்ஹ்



முஹம்மத் இசாம் (நளீமி)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

இஸ்லாமிய மார்க்கம் ஒரு பரிபூரண வாழ்க்கை வழிகாட்டி. இந்தப் பரிபூரணத் தன்மையை மனிதன் பரிபூரணமாக விளங்கி அதன் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வேண்டி அறிஞர்கள் இஸ்லாத்தை பல கலைகளாக கூறுபோட்டு ஆராய்கின்றனர். ஹதீஸ், உஸூலுல் ஹதீஸ், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், தப்ஸீர்,தஜ்வீத், மனாஹிஜுல் முஹத்திஸீன், மகாஸிதுஷ் ஷரீஆ, முகாரனதுல் அத்யான்……  என இஸ்லாமிய கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வாறான கலைகளில் அதிகமாக  மனித வாழ்க்கையுடன் பிண்ணிப்பினைந்த ஒன்றுதான் பிக்ஹ் ஆகும். இந்த சட்டக்கலைப் பற்றிய பரிபூரணமான ஒரு பார்வை இல்லை என்றாலோ அல்லது அதற்கே உரிய அணுகுமுறையில் அதை அணுகவில்லை என்றாலோ அதன் தாக்கமானது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதனால் அதைப் பற்றிய ஒரு தெளிவை வழங்குவதெற்கான ஒரு சிறு முயற்சியே இந்த ஆக்கம். இந்த ஆக்கத்தில் பிக்ஹ் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம், சில கிளைவிடயங்களில் முடிவான ஒரு முடிவை கூறமுடியாது என்பது பற்றிய விளக்கம் அதற்கான ஆதாரங்கள், நடைமுறையில் நாம் எதிர் நோக்கும் சில சட்டப்பிரச்சினைகளின் ஊடாக கருத்து முரன்பாட்டுக்கான சில நியாயங்கள் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமது கடமை என்ன என்பது பற்றியதொரு தெளிவு என்பன இன்ஷா அல்லாஹ் அலசப்படும்.

Monday, September 1, 2014

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா? -ஒரு நடுநிலைப் பார்வை


வழமையைப் போன்று இம்முறையும் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் பல முஸ்லிம்கள் மக்கமா நகரை நோக்கிப்போக தயாரான நிலையில் உள்ளனர். ஏலவே ஒரு சில நாட்களுக்கு முன்னர் இரண்டு இலச்சத்திற்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் பயணத்தை ஆரம்பித்து வைத்ததாக ஒரு சில பதிவுகளை வாசிக்கக் கிடைத்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத் தலைப்பில் சில விடயங்களை விளக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன். உலக மாந்தர்களின் அருட்கொடையாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த புனித பூமியில் அமைந்துள்ள இறை இல்லமாம் கஃபாவை தரிசித்து சில கிரியைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் தனது ஜம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியிருக்கின்றது. ஒரு முஸ்லிம் மக்கா சென்றுவர உடல், உள மற்றும் பொருளாதார ரீதியான சக்தியைபெறுவார் என்றால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.  (3:97)

இந்த வசனம் சக்தியுள்ளவர்களுக்கு ஹஜ் கடமை என பொதுவாக பேசினாலும் பெண்கள் என வரும்போது இந்த நிபந்தனையுடன் வேறு நிபந்தனை உண்டா?? இல்லையா?? என்பதில் வரலாறு நெடுகிலும் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு நிலவிவருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. ஒரு பெண் பிரயாணம் செய்ய அவளது கணவன் அல்லது திருமணம் முடிக்க ஹராமான (மஹ்ரம்) ஆண்துனை இருந்தால்தான் அவளுக்கு ஹஜ் கடமை என ஒரு சாராரும் இவ்வாறான எந்த நிபந்தனையும் இல்லை என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இரு தரப்பினரின் ஆதாரங்களையும் வாதப்பிரதிவாதங்களையும் ஆராய்ந்து பலமான கருத்து எது?? பலவீனமான கருத்து எது?? என பொதுமக்களுக்கு தெளிவுபடுதுவதே தலைப்பின் நோக்கம்.