doctor isni
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......
(இக்கட்டுரையின் முதலாம் பகுதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம் திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி 1
ஒரு முறை நபித்தோழர்களில் ஒருவருக்கு மிகுந்த கடுமையான வறுமை நிலை ஏற்பட்டது. அவரது மனைவி நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரிடம் உதவி கேட்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் உதவி பெறும் நோக்கில் நபி (ஸல்)அவர்களின் அவையில் சென்று உட்கார்ந்து கொண்டார். மேலும் நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை எப்போது தன்மீது விழும் என்ற அவாவுடன் நபியவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை அத்தோழர் மீது விழுந்தது, அவரும் தனது நிலைமையை எடுத்தியம்ப தக்க தருணம் இதுதான் என எண்ணி தனது பிரச்சினையை கூற வாய் திறக்க முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறலானார்:
ஒரு நபர் என்னிடம் தனது தேவைகளின் நிமித்தம் உதவி பெற வருகிறார் என்றால் நிச்சயமாக நாம் அதை அவருக்கு நிறைவேற்றிக் கொடுப்போம், ஆனால் அவர் தன்னிலையை வெளிப்படுத்தாது இறை நியதியை பொருந்திக் கொள்வாரேயானால் தன்னிறைவுமிக்க வசதியான வாழ்வை அல்லாஹ் அவருக்கு வழங்குவான் எனக் கூறினார்.