Sunday, September 28, 2014

வளர்ந்து வரும் தேர்தல் இலஞ்சம்!


(2014.09.14 ஆம் திகதிய ராவய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

ஊவா மாகாண சபைத் தேர்தல் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக அடையாளப்படுத்தப்படுவதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு புறம் அதிகளவில் மீறப்படும் தேர்தல் விதிமுறைகள்; இன்னொரு புறம் ஆளும் கட்சி தனது பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்வதும் அரச உடைமைகளை தனது நலனுக்காக பயன்படுத்துவதும்.

அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் உள்ளமை வெளிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனாலும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலமும், அந்தத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் கைக்கொள்ளும் மோசமான வழிமுறைகள் மூலமும் நாட்டின் ஜனநாயகம் பாதாளத்துக்குச் சென்றுள்ளத்தை ஜனாதிபதி தெரிவிக்காமை ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனெனில், அவர்தான் அந்த வழிமுறையின் ஸ்தாபகர்.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கம், தமக்கு சார்பாக உள்ள சந்தர்ப்பங்களில், தேர்தல்களை நடத்துவது இலங்கைக்கு புதியதொரு விடயம் அல்லாதபோதும், இவ்வாறு வருடம் முழுதும், நினைத்த நினைத்தவாறு தேர்தல்களை நடத்தும் வெட்கத்துக்குரிய வழிமுறை ஸ்தாபிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தின் மூலமே. இந்த ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கான சிறந்த உதாரணங்களுமாகும்.

Thursday, September 25, 2014

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைப் பராமரித்தல்



முஹம்மத் இஸாம் (நளீமி)

மாற்றுத்திறனாளி என்பவர் உடலிலோ, மனதிலோ ஏற்பட்ட சில மற்றங்களின் காரணமாக சில காரியங்களை அவர்களால் செய்ய முடியாது உள்ளவர்களாகும். WHO இன் அறிக்கைப்படி உலக சனத்தொகையில் 15% ஆனவர்கள் மாற்றுத் திறனாளிகளாகும். WORLD BANK இன் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 5% ஆனவர்கள் மாற்றுத் திறனாளிகளாகும் அதில் 20% ஆனவர்கள் ஏழைகளாகும். இலங்கை எனத் தனியாகப் பார்க்கும் போது UNESCAP என்ற நிறுவனத்தின் 2003 ம் ஆண்டு கணிப்பீட்டின்படி 7% என்ற அளவில் மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றனர். GoSLCensus என்ற நிறுவனத்தின் ஆய்வுப்படி 2001 ம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 274711 பேர் மாற்றுத்திறனாளிகளாகக் காணப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளை பின்வருமாறு வகைப்ப்டுத்துகின்றனர்.
1 மரபனுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்.
2 தாயின் கருவில் இருக்கும் போது அல்லது பிறப்பின் போது ஏற்படும்    நோய்களால் ஏற்படும் மாற்றங்கள்
3 நோயினாலோ, விபத்தினாலோ ஏற்படும் மாற்றங்கள்
4 இதுவரை கண்டு பிடிக்காத காரணங்களினால் ஏற்படும் மாற்றங்கள்

Sunday, September 21, 2014

ஜனாதிபதித் தேர்தல்: ஜே.வி.பி தனது பாத்திரத்தைப் புரிந்து கொள்ளுமா?


அஷ்கர் தஸ்லீம்


2015 ஆம் ஆண்டின் முதற் கூறுகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே அடிபட்டு வருகின்றது. நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் அதன் ஒத்திகையாகவே பலராலும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வின் ஜெனீவா மனித உரிமை விசாரணையின் விளைவாக சிலவேளை இலங்கைக்கு எதிரான தடைகள் விதிக்கப்படலாம். அதற்கு முன்னரே பிரதான இரு தேர்தல்களையும் நடத்தி முடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஒரு புறம், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற, மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதை அவதானிக்கலாம்.

இன்னொரு புறம், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க மீதான நம்பிக்கை கூடியதைக் காணவும் முடியவில்லை. ஐ.தே.க வின் இடத்தை நிரம்பும் நிலைக்கு ஜே.வி.பி யும், பொன்சேகாவின் ஜனநயாகக் கட்சியும் முன்னேறியதனையே அவதானிக்க முடிந்தது.

Thursday, September 18, 2014

குழந்தைப் பாக்கியம்

இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்
முஹம்மத் இசாம் (நளீமி)



அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி  அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூமியாக இருக்கலாம், அவனை பாதுகாக்கும் வானமாக இருக்கலாம், செப்பனிடப்பட்ட சூழலாக இருக்கலாம், பார்க்கின்ற கண்ணாக இருக்கலாம், பேசுகின்ற வாயாக இருக்கலாம், பிடிக்கின்ற கையாக இருக்கலாம், நடக்கின்ற காலாக இருக்கலாம், ஏன் சிந்திக்கின்ற மூளையாக இருக்கலாம் அனைத்துமே அவன் கருணையின் வெளிப்பாடே…! இவ்வாறு இறைவனின் அருட்கொடைகளில் மிகப் பிரதானமான ஒன்றுதான் குழந்தைப் பாக்கியம். இதைப்பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

Monday, September 15, 2014

தேசிய ஷூறா சபையின் ​உழ்ஹிய்யா வழிகாட்டல் -2014


ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!

1. உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) ஆகும். இதனை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமையசமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.

2.எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடுமாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். இவை ஆண் விலங்குகளாகவும், மாடு இரண்டு வயது பூர்த்தியானதாகவும், ஆடு ஒருவயது பூர்த்தியானதாகவும் இருத்தல் வேண்டும். முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்கு ஆடுகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும். 

Saturday, September 13, 2014

மீண்டும் ஒரு அலுத்கம வேண்டாம்





பல்லின மக்கள் வாழக்கூடிய இலங்கை நாட்டிலே நாம் மக்கள் பலத்தால் மூன்றாம் இனமாகவும் சிறுபான்மை என்ற அடிப்படையில் இரண்டாம் இனமாகவும் வாழ்ந்து வருகின்றோம். குறிப்பிட்ட சில இடங்களில் சுருங்கிவிடாமல் நாடு பூராகவும் பரந்து விரிந்து வாழ்வதே எமது பிரத்தியோகமான சிறப்பம்சம். இந்தச் சிறப்பம்சம் சில நேரங்களில் எமது பலவீனமாக அமைந்துவிடுகின்றது. இலங்கையில் இஸ்லாமிய கிராமம், முஸ்லிம் சமூகம் என்று பார்க்கின்ற போது முதலில் கண்முன் தோன்றுவது கிழக்கு மாகாணம் தான். வாளைசேனை, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, மருதமுனை, சம்மாந்துரை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, நிந்தவூர் எனப் பல முஸ்லிம் குடியிருப்புக்கள் அங்கே காணப்படுவதை நாம் நன்றாகவே அறிந்துவைத்துள்ளோம். அக்குரனை, பேருவலை, திஹாரி என்பன கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க சனத்தொகை கொண்ட முஸ்லிம் கிராமங்களாகும். இவை தவிர நாடு பூராகவும் சிறிய சனத்தொகை கொண்ட பல முஸ்லிம் கிராமங்களும் குடியிருப்புக்களும் பரவிக்கிடப்பது கண்கூடு.

Sunday, September 7, 2014

சமூக மாற்றத்திற்கு ஒரு களம் அமைப்போம்




அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமத்தை கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
கட்டம்-01
அனைத்து புகழும், சர்வமும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்விற்கே சொந்தமாகும். புகழ்பாடிப் போற்றவும் புகல் தேடி கை நீட்டவும் தகுதியானவனே! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். நீ மாபெரும் கிருபையாளன், தயாளமானவன், உன்னை நோக்கி நீட்டப்படும் கைகளை, வெறுங் கைகளாக திருப்பி அனுப்ப வெட்கப்படுபவன் ஆகவே யா அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்தருள்வாயாக!. மேலும் எங்கள் எண்ணங்களினாலும், செயற்பாடுகளினாலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தீங்குகளை விட்டும் எம்மை பாதுகாப்பாயாக!. யா அல்லாஹ் நீ எவரை நேர்வழியில் செலுத்தினாயோ அவரை எவராலும் வழிகெடுக்கவோ அல்லது நீ, யாரையெல்லாம் வழிகேட்டில் தட்டழியும்படி விட்டு விட்டாயோ அவர்களை நேர்வழிப்படுத்துவோ எவராலும் முடியவே முடியாது. மேலும் நீ மட்டுமே வணக்கத்திற்குரியவன். உன்னைத் தவிர எந்தப் படைப்பிற்கும் வணக்கத்திலே எந்தவிதப் பங்கும் இல்லை,
மேலும் முஹம்மது (ஸல்) அவனுடைய அடியாரும் திருத் தூதரும் ஆவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நபியவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், அன்னாரின் தோழர்கள் மீதும், இறுதி நாள்வரை அன்னாரின் அடியொற்றி வாழும் ஆன்மாக்களின் மீதும் என்றென்றும் உண்டாவதாக!!!

Thursday, September 4, 2014


அஷ்கர் தஸ்லீம்

உலக அரசியல் நெருக்கடிகளின் பின்னால் பல காரணிகள் தொழிற்படுகின்றன. அவ்வாறே பிராந்திய அரசியல் நெருக்கடி மற்றும் பதட்டங்களின் பின்னணியிலும் பல்வேறு உள்ளாந்த காரணிகள் தொழிற்படுவதனை அவதானிக்கலாம். இப்பின்னணியில் தெற்காசியாவின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் பிரதான காரணியாக மதத் தீவிரவாதத்தைக் குறிப்பிடலாம்.

தெற்காசியாவின் மிகப் பெரிய நாடும், உலகளவில் மிகப் பெரும் ஜனநாயக நாடுமான இந்தியாவில் உள்ள இந்துத்துவா மதத் தீவிரவாதம் குறித்த அறிமுகக் குறிப்பையே இங்கு தர முயல்கின்றேன்.

தெற்காசியாவில் மிகப் பெரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்னர் ஒரே நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கசப்புணர்வுகள், தப்பபிப்பிராயங்களின் விளைவாக இந்தியா பிளவுண்டது.

எனவே, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்த வட மேல் மற்றும் கிழக்குப் பகுதிகள் பாகிஸ்தான் என்ற பெயரோடு தனி நாடாகப் பிரிந்து சென்றன. பின்னர், நிலத்தொடர்பற்றிருந்த பாகிஸ்தானின் மேற்குப் பகுதியும் கிழக்கும் பகுதியும் பிரிந்து கிழக்குப் பகுதி பங்களாதேஷ் என்ற நாடானது.

எம்மைப் பற்றி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்....... السلام عليكم ورحمة الله وبركاته நான் அக்குறணை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது ஆரம்ப கல்வியை அக்குறணை பாலிகா மகா வித்தியாலயத்தில் கற்றேன். 

அதன் பின்னர், ஆறாம் வகுப்பு முதல் சாதாரண தரம் வரை அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கற்று, 2006 ஆம் ஆண்டு சாதாரணத்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன் அல்-ஹம்துலில்லாஹ். மேற்ப்படிப்பை “அல்-ஜாமியா அந்-நளீமிய்யா அல்-இஸ்லாமிய்யா” வில் தொடர்வதற்கான வாய்ப்பை வல்ல நாயன் எனக்கு ஏற்படுத்தித் தந்தான். 

இங்கு ஷரீஆ கல்வியை ஆழமாகக் கற்றதோடு, உயர் தரப் பரீட்சை மற்றும் அல்-ஆலிம் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்தேன், அல்-ஹம்துலில்லாஹ். அடுத்த கட்டமாக பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக இணைந்து நுழைவுப் பரீட்சையான G.A.Q இல் சித்தியடைந்து தற்போது B.A பரீட்சையை எதிர்பார்த்து இருக்கின்றேன். 

2014.04.15 இல் வெற்றிகரமாக 7 வருட இஸ்லாமிய கற்கைநெறியை நிறைவுசெய்து ஒரு நளீமியாக சமூகத்தில் காலடி வைத்தேன். அல்-ஹம்துலில்லாஹ். கற்ற கல்வியை எவ்வாறாவது சமூகத்திற்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அவாவின் வெளித்தோற்றம்தான் இந்த Shamsul Huda Research Foundation. எமது வெற்றிப்பாதைக்கு என்றும் உங்கள் துஆவை வேண்டியவனாய் உங்கள் சகோதரன், Ash- sheik Mohamed Isam (Naleemi)

Wednesday, September 3, 2014

நவீன இஸ்லாமிய சிந்தனையும் எமது நிலையும்



அஷ்கர் தஸ்லீம்



என்றுமில்லாதது போல் இஸ்லாத்தைப் பற்றித் தேடுபவர்களது தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனை அவதானிக்கின்றோம். உலகின் அனைத்து விவகாரங்களையும் அனைத்து அறிவுத் துறைகளையும் இஸ்லாமியப் பின்னணியோடு புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவதனையும் அவதானிக்கின்றோம். மிகவும் ஆரோக்கியமான இந்தத் தோற்றப்பாடு ஐரோப்பா முதல் ஆசியா வரை வியாபித்திருக்கின்றமை இன்னுமொரு விஷயம்.

இத்தனைக்கும் எமது தமிழ் மொழிச் சூழலில் இஸ்லாத்தை ஒரு முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைக்கும் முறைமை அவ்வளவு வளர்ச்சியுற்றதாகத் தெரிவதில்லை.  இஸ்லாத்தை ஒரு மாற்று சிந்தனையாக, ஒரு நாகரிகத் திட்டமாக, ஒரு வாழ்க்கை முறையாக முன்வைக்கும் போக்கு இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய தேவை அதிகம் உணரப்படுகின்றது.

சமகால உலகு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் மற்றும் தற்கால உலகில் செல்வாக்குச் செலுத்துகின்ற முதலாளித்துவம், உலகமயமாக்கம், மனித உரிமைகள், ஜனநாயகம், லிபரலிஸம், மதச்சார்பின்மை முதலிய சிந்தனைகள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டை அல்லது சிந்தனையை முன்வைப்பதனையே நாம் நவீன இஸ்லாமிய சிந்தனை என சுருக்கமாக வழங்குகின்றோம்.

Monday, September 1, 2014

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா? -ஒரு நடுநிலைப் பார்வை


வழமையைப் போன்று இம்முறையும் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் பல முஸ்லிம்கள் மக்கமா நகரை நோக்கிப்போக தயாரான நிலையில் உள்ளனர். ஏலவே ஒரு சில நாட்களுக்கு முன்னர் இரண்டு இலச்சத்திற்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் பயணத்தை ஆரம்பித்து வைத்ததாக ஒரு சில பதிவுகளை வாசிக்கக் கிடைத்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத் தலைப்பில் சில விடயங்களை விளக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன். உலக மாந்தர்களின் அருட்கொடையாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த புனித பூமியில் அமைந்துள்ள இறை இல்லமாம் கஃபாவை தரிசித்து சில கிரியைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் தனது ஜம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியிருக்கின்றது. ஒரு முஸ்லிம் மக்கா சென்றுவர உடல், உள மற்றும் பொருளாதார ரீதியான சக்தியைபெறுவார் என்றால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.  (3:97)

இந்த வசனம் சக்தியுள்ளவர்களுக்கு ஹஜ் கடமை என பொதுவாக பேசினாலும் பெண்கள் என வரும்போது இந்த நிபந்தனையுடன் வேறு நிபந்தனை உண்டா?? இல்லையா?? என்பதில் வரலாறு நெடுகிலும் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு நிலவிவருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. ஒரு பெண் பிரயாணம் செய்ய அவளது கணவன் அல்லது திருமணம் முடிக்க ஹராமான (மஹ்ரம்) ஆண்துனை இருந்தால்தான் அவளுக்கு ஹஜ் கடமை என ஒரு சாராரும் இவ்வாறான எந்த நிபந்தனையும் இல்லை என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இரு தரப்பினரின் ஆதாரங்களையும் வாதப்பிரதிவாதங்களையும் ஆராய்ந்து பலமான கருத்து எது?? பலவீனமான கருத்து எது?? என பொதுமக்களுக்கு தெளிவுபடுதுவதே தலைப்பின் நோக்கம்.