முஹம்மத் இசாம் (நளீமி)
அறிவியல் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம்
வாழ்ந்து வருகிறோம். நீண்ட கால முயற்ச்சி,
ஆழமான ஆய்வு, கடுமையான உழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு
விஞ்ஞானம் கண்டிடுத்த எத்தனையோ அறிவியல்
உண்மைகளையும், கோட்பாடுகளையும் அல்குர்ஆன் ஓரிண்டு வசனங்களில் அழகாகவும், தெளிவாகவும் கூறியிருப்பதைப் பார்த்து எத்தனையோ பேர்
நிச்சயமாக இது இறை வேதம்தான் எனக் கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.
புனித அல்குர்ஆனில் பிழை கண்டுபிடிக்க வேண்டும் என முனைபவர்கள்,
அதிகமாக சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்தான் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு. எந்த ஒரு ஆணும் தீண்டாமல் ஒரு குழந்தை பிறப்பது என்பதும், பிறந்த குழந்தை உடனே பேசியது என்பதும் அறிவியலுக்கு
முற்று முழுதாக மாற்றமானது,
எனவே இஸ்லாம் இறை வேதம் அல்ல என்பதுவே இவர்களது
வாதம். இவர்களது வாதம் சரிதானா? என்பதை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் பார்ப்பதே
இக்கட்டுரையின் நோக்கம்.
குழந்தை உருவாக்கத்துக்கு
ஆண்கள் கட்டாயம் என்ற காலம் மலையேறி, ஒரு பெண் மாத்திரமே போதும் என்ற காலத்திலேயே நாம் தற்போது
வாழ்கிறோம். அதாவது, ஒரு மனிதனின்
உயிரணு அல்லது மரபணுவை எடுத்து ஒரு பெண்ணின் கருவறையில் வைத்து வளர்ப்பதன் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என்று நவீன அறிவியல் ஆய்வுகள்
கூறுகின்றன. இந்த வழிமுறைதான் “குளோனிங்”
என வழங்கப்படுகின்றது.
1970 களில் கண்டுபிடிக்கப்பட்ட
இந்த வழிமுறை, ஆரம்பமாக தாவரங்களில் பயன்படுத்தப்பட்டு
பாரிய வெற்றியையும் கண்டது.