Thursday, September 4, 2014

எம்மைப் பற்றி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்....... السلام عليكم ورحمة الله وبركاته நான் அக்குறணை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது ஆரம்ப கல்வியை அக்குறணை பாலிகா மகா வித்தியாலயத்தில் கற்றேன். 

அதன் பின்னர், ஆறாம் வகுப்பு முதல் சாதாரண தரம் வரை அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கற்று, 2006 ஆம் ஆண்டு சாதாரணத்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன் அல்-ஹம்துலில்லாஹ். மேற்ப்படிப்பை “அல்-ஜாமியா அந்-நளீமிய்யா அல்-இஸ்லாமிய்யா” வில் தொடர்வதற்கான வாய்ப்பை வல்ல நாயன் எனக்கு ஏற்படுத்தித் தந்தான். 

இங்கு ஷரீஆ கல்வியை ஆழமாகக் கற்றதோடு, உயர் தரப் பரீட்சை மற்றும் அல்-ஆலிம் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்தேன், அல்-ஹம்துலில்லாஹ். அடுத்த கட்டமாக பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக இணைந்து நுழைவுப் பரீட்சையான G.A.Q இல் சித்தியடைந்து தற்போது B.A பரீட்சையை எதிர்பார்த்து இருக்கின்றேன். 

2014.04.15 இல் வெற்றிகரமாக 7 வருட இஸ்லாமிய கற்கைநெறியை நிறைவுசெய்து ஒரு நளீமியாக சமூகத்தில் காலடி வைத்தேன். அல்-ஹம்துலில்லாஹ். கற்ற கல்வியை எவ்வாறாவது சமூகத்திற்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அவாவின் வெளித்தோற்றம்தான் இந்த Shamsul Huda Research Foundation. எமது வெற்றிப்பாதைக்கு என்றும் உங்கள் துஆவை வேண்டியவனாய் உங்கள் சகோதரன், Ash- sheik Mohamed Isam (Naleemi)

No comments:

Post a Comment